மாட்டின் கர்ப்பப்பை வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்????

கறவை மாடு வளர்க்கும் விவசாயிகளிடையே பெரும்பாலும் காணப்படும் முக்கியமான பிரச்சனைகளில் சினை பிடிக்காத மாடுகளை பராமரிப்பது மிகவும் கடினமாகிறது.

மாடு சினை பிடிக்காததற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணமாக தீவன மேலாண்மை அமைகிறது.
கர்ப்பப்பை சரியான வளர்ச்சி அடையவில்லை என்றால் சினை பிடிப்பது சிரமம் ஆகிறது.
கர்ப்பப்பை வளர்ச்சி அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்???
1.கொண்டைக்கடலையை 200 கிராம் ஊறவைத்து முளைகட்டி அரைத்து ஏழு நாட்களுக்கு கொடுக்க வேண்டும் (அ)
2.நாட்டுக் கம்பு 100 கிராம் ஊறவைத்து முளைகட்டி அரைத்து தினசரி கொடுத்து வர வேண்டும் (அ)
3. தாது உப்பு கலவை 30 கிராம் தினசரி தீவனத்துடன் கொடுத்து வரவேண்டும்(அ)
4. சமச்சீர் தீவனம் என்று அழைக்கப்படும் பசுந்தீவனம் உலர்தீவனம் மற்றும் அடர்தீவனம் ஆகிய மூன்றும் சரியான அளவு தினசரி கொடுக்கப்படவேண்டும்.(அ)
5. முக்கியமாக இவை அனைத்தையும் செய்வதற்கு முன்னர் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.


Share:

1 comment:

Spotify

YouTube

Popular Posts

Labels

Archive

Recent Posts