25 வயது மாடு இரண்டு கன்றுக்குட்டிகள் ஈன்றது.
இயல்பாக மாடுகள் 15-20 வயது வரை வாழக்கூடியவை.
இந்தியாவை பொறுத்தமட்டில் 10 முதல் 12 கன்றுகளை ஈனும் மாடுகளை பார்ப்பதே அரிதாக உள்ளது.
ஆனால் லண்டனைச் சார்ந்த ஒரு பழமையான மாட்டுப் பண்ணையில் உள்ள 25 வயது மாடு இன்று 2 கன்றுகள் ஈன்றுள்ளது அதிசயம் என கூட சொல்லலாம்
1995 முதல் இந்தப் பசு 20 முறை கன்றுகள் ஈன்று உள்ளது.
இந்திய நாடுகளில் அதுவும் நம் தமிழ்நாட்டில் கறவை மாடு வளர்ப்பவர்கள் அதிக பட்சம் ஒரு கறவை மாட்டை ஐந்து முதல் ஆறு வருடங்களுக்கு மட்டுமே வைத்துள்ளனர். பசு வாங்கும்பொழுது கூட இரண்டாம் மற்றும் மூன்றாம் கன்று ஈன்றுள்ள பசுக்களை மட்டுமே வாங்குகின்றனர். அதன்பின் சினை பிடிக்காத பிரச்சனையின் காரணமாக பெரும்பாலும் மாடுகளை விற்று விடுகின்றனர்.
ஆனால் லண்டனில் சோமர்செட் என்னும் ஊரில் உள்ள ஒரு மாட்டுப் பண்ணையில் 25 வயதான பசு இரண்டு கன்றுகள் ஈன்று உள்ளது.மிகப் பெரும் அதிசயமாக கருதப்படுகிறது.
உண்மையில் இது ஒரு அதிசய பசு தான்
இடம்: சோமர்செட், லண்டன்
Place: Lower Thorn Farm, North Barrow, Somerset, UK.
Source : Farmers weekly, UK.