இயல்பாக பால் கறக்கும் கறவை மாடுகள் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது திடீரென பால் ஜுரம் வந்தாலோ தன்னுடைய இயல்பான பால் உற்பத்தி சற்று குறைந்து பால் காணப்படும். இதை சரி செய்வதற்கு 100 கிராம் கருப்பு உளுந்து முழு உளுந்து (ஊறவைத்து அரைத்தது) அதனுடன் 100 கிராம் மண்டை வெல்லம் கலந்து தினசரி ஒருவேளை தொடர்ந்து 10 நாட்களுக்கு கொடுத்துவர பால் உற்பத்தி அளவு உயரும்.
சில மாடுகள் கன்று ஈன்ற பிறகு பால் சுரப்பு கிடைக்காது இதுபோன்ற மாடுகளுக்கும் மேற்கூறிய முறையை பயன்படுத்திப் பார்க்கலாம் இரண்டு நாட்களில் முன்னேற்றம் இல்லை என்றால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகுவது சிறந்தது.
குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் முதலுதவி மட்டுமே மருத்துவம் அல்ல
ஆடுகளுக்கு பால் சுரக்க
கைப்பிடி அளவு உளுந்து கைப்பிடி அளவு அரைத்த பிரண்டை கைப்பிடி அளவு வெல்லம் இது மூன்றையும் கலந்து ஏழு நாட்களுக்குக் கொடுத்து வரவும்