பால் கறவை குறைந்தால் என்ன செய்வது
மாட்டிற்கு எந்த நேரத்தில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்???????
மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்வதற்கென தனி ஒரு அட்டவணை இருந்தாலும் கால்நடை வளர்க்கும் நண்பர்களுக்கு பெரும்பாலும் எழக்கூடிய சந்தேகம், எப்பொழுது குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்??? என்பதுதான் மூன்று வார கன்றுகுட்டியை தவிர வேறு எந்த வயதாக இருந்தாலும் அது கிடேரி , சினை மாடு, மறுப்பு மாடு மற்றும் கறவை மாடு ஆகட்டும் உங்கள் ஊரில் உள்ள கால்நடை மருத்துவரின் ஆலோசனை படி நீங்கள் குடற்புழு நீக்கம் செய்யலாம்.
பின்குறிப்பு: குடற்புழு மருந்தை தேர்ந்தெடுக்கும் உரிமையை உங்கள் ஊரில் உள்ள கால்நடை மருத்துவரிடம் விட்டு விடுங்கள்.
மாட்டுக்கு எள்ளுப் புண்ணாக்கு கொடுக்கலாமா??????
மாடுகளுக்கு புண்ணாக்கு அடர் தீவனம் என்ற வகையில் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் கடலை புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு, பருத்தி புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு போன்ற பலவகை புண்ணாக்குகள் வழங்கப்பட்டு வருகின்றது. மக்களிடம் பரவலாக இருக்கும் ஒரு கருத்து எள்ளு புண்ணாக்கு வைத்தால் மாடு இளைத்து விடும் என்பது. கிராமங்களில் ஒரு பழமொழி இருக்கிறது என்னவென்றால் "கொழுத்தவனுக்குகொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு" இந்தப் பழமொழி நமக்கு கூறும் கருத்து இதிலிருந்து நமக்கு கிடைக்கப் பெறும் தகவல் எள்ளு கொடுப்பதால் மாடுகள் இளைப்பதில்லை மாறாக பால் கூடுதலாக கிடைக்கின்றது. இந்த தவறான கருத்தை கைவிடுமாறு கால்நடை நண்பர்களுக்கு சிறிய வேண்டுகோள் விடுகிறேன் கறவை மாடுகளுக்கு எள்ளு புண்ணாக்கு கொடுப்பதால் எந்த ஒரு பாதிப்பும் வருவதில்லை.
அனைத்து வகை மாடுகளுக்கும் எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாம் எந்த ஒரு பாதிப்பும் வராது
கன்று குட்டிகளுக்கான குடற்புழு நீக்கம்
குடற்புழு நீக்கம் கன்றுக்குட்டிகளுக்கு முக்கியமான பராமரிப்பு சார்ந்த விஷயமாக இருக்கிறது. கன்று பிறந்த 21 நாட்களில் முதல் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். பின்பு 6 மாதம் வரை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு குடற்புழு நீக்க மருந்துகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி அளிக்க வேண்டும். கன்று குட்டி கிடேரி ஆன பிறகு வருஷம் இரு முறை குடற்புழு நீக்கம் செய்தல் நல்லது. இந்த அட்டவணைப்படி குடற்புழு நீக்கம் செய்துவந்தால் கன்று குட்டிகள் விரைவில் பருவத்திற்கு வரும் நாம் செய்யும் கால்நடை வளர்ப்பு தொழில் லாபகரமாக அமையும்.
மாடுகளை பொறுத்தமட்டில் வருடம் இருமுறை குடற்புழு நீக்கம் செய்தால் நல்லது மழைக்காலத்திற்கு முன்னரும் வெயில் காலத்திற்கு முன்னரும்
கோமாரி தடுப்பூசியின் அவசியம்
கோமாரி நோய்
ஒரு பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய். இந்த நோயை கட்டுப்படுத்த அரசாங்கம் கோமாரி ஒழிப்புத்திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருடத்திற்கு இரு முறை கோமாரி நோய்க்கான தடுப்பூசி கால்நடை வளர்ப்பவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றது. மக்கள் இதை பயன்படுத்திக்கொண்டாள் இந்த நோயினால் ஏற்படும் பொருளாதார இழப்பை கட்டுப்படுத்த முடியும்.
குறிப்பு :
தடுப்பூசி போடுவதால் கருச்சிதைவு ஏற்படாது
பால் உற்பத்தி குறையாது
மடி நோய் என்றால் என்ன ?
மடிநோய் என்பது பராமரிப்பு சம்பந்தப்பட்ட நோய்
எதனால் வருகிறது ?
- பலவகையான கிருமிகளால் மடிநோய் வரக்கூடும்
- பாக்டீரியா , வைரஸ் ,பாசி ஆகிய அனைத்து வகையான கிருமிகளால் மடிநோய் வரும்.
தடுப்பு முறைகள்
- பால் கறவையாளர் பால் கறப்பதற்கு முன்பு தன் இரு கைகளையும் சுத்தமாக கழுவிய பின்னரே பால் கறக்க வேண்டும்
- கறவை இயந்திரம் பயன்படுத்தினால் இயந்திரத்தை சுத்தமாக கழுவிய பின்னரே பால்கறக்க வேண்டும்
- KMno4 /சோப்பு பயன்படுத்தலாம்