மாடுகளுக்கு புண்ணாக்கு அடர் தீவனம் என்ற வகையில் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் கடலை புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு, பருத்தி புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு போன்ற பலவகை புண்ணாக்குகள் வழங்கப்பட்டு வருகின்றது. மக்களிடம் பரவலாக இருக்கும் ஒரு கருத்து எள்ளு புண்ணாக்கு வைத்தால் மாடு இளைத்து விடும் என்பது. கிராமங்களில் ஒரு பழமொழி இருக்கிறது என்னவென்றால் "கொழுத்தவனுக்குகொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு" இந்தப் பழமொழி நமக்கு கூறும் கருத்து இதிலிருந்து நமக்கு கிடைக்கப் பெறும் தகவல் எள்ளு கொடுப்பதால் மாடுகள் இளைப்பதில்லை மாறாக பால் கூடுதலாக கிடைக்கின்றது. இந்த தவறான கருத்தை கைவிடுமாறு கால்நடை நண்பர்களுக்கு சிறிய வேண்டுகோள் விடுகிறேன் கறவை மாடுகளுக்கு எள்ளு புண்ணாக்கு கொடுப்பதால் எந்த ஒரு பாதிப்பும் வருவதில்லை.
அனைத்து வகை மாடுகளுக்கும் எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாம் எந்த ஒரு பாதிப்பும் வராது