கால்நடைகளை நாய் கடித்தால் என்ன செய்வது????

கால்நடைகளை தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் கடிப்பது இயல்பாக காணப்படுகிறது. இதில் அதிகமாக பாதிக்கப்படுவது கன்று குட்டிகள், ஆடுகள் மற்றும் கோழிகள்.
நாய் கடித்தால் விஷம் என்ற பயம் தேவையில்லை
கால்நடைகளை கடித்தது வெறிநாய்க்கடி நோய் பாதிக்கப்பட்ட (Rabies)நாயாக இருந்தால் மட்டுமே பயம் வேண்டும். பாதிக்கப்பட்ட நாயாக இருந்தால் மட்டுமே நோய் பரவும்.
வெறிநாய்க்கடி நோய் என்னும் கொடிய உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் வெறித்தனமாக சுற்றித்திரிந்து அருகில் உள்ள அனைத்து கால்நடைகள் மற்றும் மனிதர்களை கடிக்க முற்படும். 
இந்நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் 10 நாட்களுக்குள் உயிரிழக்க நேரிடும்.
இப்படி நாம் வளர்க்கும் கால்நடைகளை நாய்கள் கடிக்க நேரிட்டால் என்ன செய்ய வேண்டும்????
1.கடித்த இடத்தை உடனடியாக சுத்தம் செய்வது அவசியம் 2.காயத்தை வெயில் படும்படி காய வைப்பது அவசியம் 3.உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று நோய்க்கான தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக மிக அவசியம்.
நாய்க்கடியின் தாக்குதலை பொருத்து எத்தனை ஊசிகள் போட வேண்டும் என்பதை கால்நடை மருத்துவர் முடிவு செய்வார்.

வெறிநாய் கடி நோய் தடுப்பூசியால் மட்டுமே தவிர்க்க முடியும்.

 இந்த நோய் 100% குணப்படுத்த முடியாத நோய் ஆனால் 200% எளிதில் தடுக்கக்கூடிய நோய்.



தடுப்பூசி போடுவோம் !!!!கால்நடைகளைக் காப்போம்!!!
Share:

No comments:

Post a Comment

Spotify

YouTube

Popular Posts

Labels

Archive

Recent Posts