இப்படி நினைப்பதற்கு காரணம் மாடுகளுக்கு போடப்பட்ட சினை ஊசி கீழே ஊற்றி விடும் என்ற நினைப்பு.
மாட்டை தலைகீழாக வைத்து குலுக்கினாள் கூட இப்படி நடக்காது.
முந்தைய காலங்களில் பசுக்களை பொலிகாளை களிடம் இனப்பெருக்கம் செய்வதற்காக எடுத்துச் சென்றனர். இயற்கை முறையில் காளைகள் விந்துக்களை பசுவின் அறையில் செலுத்தும்போது அதிக அளவிலான விந்து கலவை அறையில் தங்கிவிடும் மாடு கீழே அமரும்போது அது வெளிவர நேரிடும்.
இந்த எண்ணம் கொண்டுதான் சினை ஊசி போட்டால் கூட மாடை கீழே உட்கார விடக்கூடாது என்று விவசாயிகள் கருதுகின்றனர்.
சினை ஊசி போடும்போது மிக குறைந்த அளவிலான விந்து நேரடியாக கர்ப்பப்பையில் செலுத்தப்படுகிறது அதனால் மாடு கீழே அமர்ந்தாள் கூட அது வெளியில் வருவதற்கு வாய்ப்பே கிடையாது அதனால் சினை ஊசி போடப்பட்ட மாடுகள் கீழே உட்காருவதில் எந்த ஒரு தவறும் கிடையாது.
No comments:
Post a Comment