உப்பில் 40 சதவீதம் சோடியம் உள்ளது
இயற்கையாகவே மாடுகள் உப்பு சுவை கொண்ட தாவரங்களை விரும்பி உண்கின்றன இது அதன் உணவுப் பையிலுள்ள செரிமானத்தை அதிகரிக்கிறது.
அசைபோடும் விலங்குகளான மாடுகள் ஒரு நாளைக்கு 150 லிட்டர் உமிழ்நீர் சுரக்கின்றது இது அது உண்ணும் தாவரங்களை ஜீரணிக்க பெரிதும் உதவுகிறது.
உப்பு கலந்த தீவனத்தை மாடுகள் அருந்தும் போது அவை அதை மிகவும் விரும்பி உண்கின்றன இது உமிழ்நீர் உற்பத்தியை சீராக்கி செரிமானத்திற்கு உதவுகிறது
ஏன் உப்புச்சத்து (சோடியம் க்ளோரைட்) மாடுகளுக்கு அவசியமானது?
கீழ்கண்ட செயல்பாடுகளுக்கு உப்புச்சத்து கால்நடைகளுக்கு அவசியமானது.
1. பொது உடல் செயல்பாடு பராமரிப்பு
2. உடலில் திரவ சமநிலை / சவ்வூடுபரவல் (osmosis) பராமரிப்பு
3. நரம்புமண்டல பராமரிப்பு
4. உடலில் நொதி சீராக செயல்படுவதற்கு
5. உமிழ்நீர் நன்றாக சுரக்க மற்றும் செரிமானம் ஆவதற்கு
6. சத்துக்களை உறிஞ்சி ரத்தத்தில் கடத்துதல்
7. இரத்த அழுத்தத்தை சீராக வைக்க
சோடியம் உடலில் அதிக அளவு சேமிக்கப்படுவதில்லை. அதனால் தினமும் உப்பு சிறிதளவு தீவனத்தில் கலந்து கொடுப்பதால் மாடுகளின் ஆரோக்கியம் பெருகும்
ஆகவே கண்டிப்பாக உப்புச்சத்து கால்நடைகளுக்கு அவசியமானது. கல்லுப்பை பயன்படுத்தவும்.
ஒரு நாளைக்கு ஒரு மாட்டுக்கு 1 கைப்பிடி(50 gm) அளவு கொடுத்து வரவும்
தகவல்:
ARUN SHANKER GORKY. A
அருண் சங்கர் கார்க்கி. ஆ
No comments:
Post a Comment