அமர் நிலையில் இருக்கும் பசுக்களைப் பராமரிப்பது எப்படி???

கன்று ஈன்ற மாடுகள் இயல்பாக சுண்ணாம்பு சத்து குறைபாட்டினால் அமர்ந்த நிலையில் காணப்படும்.
இப்படி இருக்கும் மாடுகளுக்கு பராமரிப்பு முதலுதவிகள் என்ன செய்ய வேண்டும்

1. மாடு அமர்ந்திருக்கும் இடத்தை வைக்கோலை கொண்டு நிரப்பி அதன்மேல்  சாக்கு விரித்து மிருதுவான படுக்கை தயார் செய்து அதன் மேல் மாட்டினை அமர வைப்பது சிறந்ததாகும்.
2. மாட்டை ஒரே பக்கத்தில் அமர வைப்பதை தவிர்க்க வேண்டும் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை அதன் அமர் நிலையை மாற்றியமைக்க வேண்டும்
உதாரணத்திற்கு இடது காலில் அமர்ந்திருக்கும் பசுவை வடக்கு காலில் அமரும்படி மாற்ற வேண்டும்.
இப்படி செய்வதால் கால்கள் மறுப்பதை தவிர்க்க முடியும்.
3. பொறுக்கும் அளவிற்கு சுடுநீர் கொண்டு இரு கால்களிலும் ஒத்தடம் கொடுக்க வேண்டும்

குறிப்பு :உடனடியாக மருத்துவரை அழைத்து சிகிச்சை கொடுப்பது சிறந்தது மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் மருத்துவர் வரும் வரை மாட்டிற்கு பாதிப்பு வராமல் தடுக்கும்
Share:

No comments:

Post a Comment

Spotify

YouTube

Popular Posts

Labels

Recent Posts