வேதிப்பொருள்கள்:
1. போவிடோன் ஐயோடின் (Povidone Iodine)
• சிறந்த கிருமிநாசினி
• புண் மற்றும் காயங்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
• பிறந்த கன்று குட்டியின் தொப்புள் கொடியை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது
2. டிஞ்சர் பென்சாயின் (Tincture Benzoin)
• கால்நடைகளில் கொம்பு உடைத்தல் போன்றவற்றால் ஏற்படும் அதீத இரத்தப்போக்கை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.
• இதை அடிபட்டஇடத்தில் தடவி கட்டுத்துணியால் கட்டவும். இரத்தப்போக்கு கட்டுப்படும்.
• 5 மில்லி டிஞ்சர் பென்சாயினயை ஒரு லிட்டர் கொதிக்கும் தண்ணீரில் கலந்து சளி, செருமல் இருக்கும் மாடுகளுக்கு வேதுபிடிக்க பயன்படுத்தலாம்.
3. போரிக் அமிலம் தூள் (Boric Acid Powder)
• கால்நடைகளில் ஏற்படும் காயங்களுக்கு இந்த தூளை வேப்பஎண்ணெய் சேர்த்து அதன்மேல் தடவலாம்.
• போலி பசுஅம்மை, வாய்க்கோமரி போன்ற நோய்களால் ஏற்படும் புண்களை குணமாக்க வல்லது.
4. எப்சம் உப்பு (MgSo4) - (Epsom Salt)
• இது வெளிமம் நாலுயிரகக்கந்தகம் (மக்னீசியம் சல்பேட்டு)
• கால்நடைகளில் முட்டிவீக்கம், உடலில் கல்லு போல வீக்கம் இருந்தால் அதன்மேல் இதனை தடவலாம்
5. கிளிசரின் (Glycerine)
• இதனை போரிக் அமிலம், அல்லது எப்சம் உப்புடன் கலந்து கால்நடைகளில் முட்டி வீக்கம், சீழ்க்கட்டி மேலே தடவலாம்.
• இதனை கால்நடைகளின் பால் மடியில் தடவக்கூடாது
6. சுண்ணாம்புத்துண்டு / நாமக்கட்டி (Chalk Piece)
• இதனை வினிகர் (அ) காடி உடன் கலந்து கால்நடைகளில் மடிவீக்கத்துக்கு முதலுதவியாக தடவலாம்.
7. பொட்டாசியம் பெர்மாங்கனேட் (Potassium
Permanganate):
• இது சாம்பரம் நாலுயிரகமங்கனம் எனப்படும்
• சிறந்த கிருமிநாசினி - கொட்டகைத்தரைகள், தீவனத்தொட்டிகள், பால்கறவை இயந்திரங்கள், கைகால்கள், கால்நடைகளின் மடி, குளம்புகளை சுத்தம் செய்ய சிறந்த கிருமிநாசினி
• மடிநோய் வராமல் தடுக்க மாட்டின் மடியைக்கழுவ இதனை பயன்படுத்தலாம்.
• நஞ்சுக்கொடியைசரியாக போடாத மாடுகளில் கழிவுவெளியேற்றும் போது வரும் துர்நாற்றத்தை தடுக்க பயன்படுத்தலாம்.
8. டர்பென்டின் எண்ணெய் (Turpentine oil)
• இதனை காயத்தில் உள்ள புழுக்களை வெளியிலெடுக்க பயன்படுத்தலாம்.
இயற்கைப்பொருள்கள்:
இயற்கைப் பொருள்கள் |
பயன்பாடு |
1. வேப்பஎண்ணெய் |
எந்தவகை காயங்கள்மேலும் இதனை தடவலாம்.
ஈ, கொசு போன்றவை காயத்தை அரிக்காமல், புழுவைக்காமல் காக்கும். |
2. மஞ்சள்தூள் |
சிறந்த இயற்கை கிருமிநாசினி. இதனை வேப்பஎண்ணெய்யுடன்
சேர்த்து தடவலாம் |
3. பச்சைக்கற்பூரம் |
காயங்களில் புழு வைத்துவிட்டால், இயற்கைமுறையில்
அதனை வெளியெடுக்க பச்சைக்கற்பூரம், வேப்பெண்ணை, மஞ்சள்தூளை காயத்தில் தடவினால் புழுக்கள் வெளியேறும். |
உபகரணங்கள்:
1. பஞ்சு சுருள்கள்
2. பஞ்சு வலைக்
கட்டுத்துணிகள்
3. அறுவை சிகிச்சை கத்தரிக்கோல்
4. அறுவை சிகிச்சை இடுக்கி (Forceps) - புழுக்களை எடுக்க
பயன்படுத்தலாம்
தொகுப்பு:
- கார்க்கி. ஆ, B.E, M.A
தேர்வு
பயிற்சியாளர் / Exam Trainer & Mentor
No comments:
Post a Comment